கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு 

by Editor / 28-06-2023 08:46:41pm
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு  தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு ‘தமிழ்நாடு முதலமைச்சரின்” சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்திடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று (28.06.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்   அரிக்கண்ணன் மற்றும் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்   வழங்கி இதே போன்று எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
 

Tags :

Share via