பள்ளி மாணவர் உட்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி பலி

by Editor / 01-07-2023 09:46:55pm
பள்ளி மாணவர் உட்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி பலி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கணவாய்பட்டி பகுதியில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் பலியானார்கள்.&nbsp; நாமக்கல் மாவட்டம்&nbsp;ராசிபுரம் அருகே கணவாய்பட்டி பகுதி&nbsp;பிலிப்பாக்குட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அபினேஷ், நிதிஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் வளைவில் திடீரென நிலைதடுமாறி சாலையோரத்திலிருந்த 100 அடி ஆழமுள்ள &nbsp;கிணற்றில் விழுந்தனர்.அபினேஷ், நிதிஷ்குமார் மீட்கப்பட்ட நிலையில் விக்னேஷை மீட்க குப்புசாமி , அசோக்குமார், சரவணன் ஆகியோர் முயன்றனர்.&nbsp; அதில் விக்னேஷை மீட்பதற்காக கிணற்றில் குதித்த 3 பேரும் நீரில் மூழ்கி பலியானார்கள். பின்னர் கிணற்றில் மூழ்கிய விக்னேஷ் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.நாமக்கல்லில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;கிணற்றுக்குள் விழுந்த மாணவர்களை மீட்க சென்ற மூன்று பேரும் ஒரு மாணவரும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான 4 பேரில் குப்புசாமி, அசோக்குமார், சரவணன் ஆகிய 3 பேர் கே.கணவாய்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.4 பேர் உடல்களும் கிரேன் மூலமாக மீட்கப்பட்டது. <br /> &nbsp; பள்ளி மாணவர் உட்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி பலி
 

Tags :

Share via