அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்
அமெரிக்காவில் ஜூலை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வட அமெரிக்கா மற்றும் கனடா கடற்பகுதிகளில் சுனாமி அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாண்ட் பாயிண்ட் நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் 89 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :