அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் இத்துடன் கரூரில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் வீடு அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் இதற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு அலுவலகங்களில் அரச ஒப்பந்ததாரர்களாக இருக்கக்கூடிய அவர்களுடைய வீடு அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் தற்பொழுது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் உதவியுடன் மலர்க்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று திண்டுக்கல் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது. செந்தில் பாலாஜியினுடைய உதவியாளர் சங்கர் தனலட்சுமி மார்பிள்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :