காட்டுப்பன்றி மற்றும் நரி இறைச்சியை விற்க முயன்ற நபர் கைது   5 நாட்டு வெடி குண்டு பறிமுதல்.

by Editor / 27-08-2023 08:22:09pm
காட்டுப்பன்றி மற்றும் நரி இறைச்சியை விற்க முயன்ற நபர் கைது   5 நாட்டு வெடி குண்டு பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகளில் ஆட்டு மாமிசத்தின் கொழுப்பை  கலந்து காட்டுப்பன்றி மற்றும் நரிகளை ஒருகும்பல் வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக திண்டிவனம் வனச்சாரக அலுவலருக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து வனச்சரக  அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மயிலம் கிராம எல்லையில் சோதனை மேற்கொண்டனர் அப்போது மயிலம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த மணி என்பவர்  காற்று பன்றி,மற்றும் நரி மாமிசத்தை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது வனச்சரக அதிகாரிகளை கண்டவுடன் விற்பனைக்காக வைத்திருந்த மாமிசங்களை குப்பைகளில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முற்பட்டார்.அவரை மடக்கி பிடித்து  வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று  விசாரணை செய்ததில் அவர் நாட்டு வெடி குண்டுகளில் ஆட்டுக் கொழுப்பை கலந்து அந்த மோப்ப சக்தி மூலமாக காட்டு பன்றி மற்றும் நரிகள் வந்தவுடன் அந்த நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து அவைகளை வேட்டையாடி அந்த மாமிசங்களை இந்த பகுதியில் அவர் விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது அவர் மீதுவனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி  வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்த ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.மேலும் அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

Tags :   5 நாட்டு வெடி குண்டு பறிமுதல்.

Share via