மதுரையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

by Editor / 24-07-2021 06:18:26pm
  மதுரையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை


தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தினர்.


தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 5 மணி முதல் அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


இது போல் மதுரையில் தெப்பக்குளம் தமிழன் தெருவில் வசித்து வரும் அப்துல்லா என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை நடந்தது.

 

Tags :

Share via