தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு.. எச்சரிக்கை

by Staff / 14-09-2023 11:42:05am
தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு.. எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 6 பேர், புதுக்கோட்டையில் 5 பேருக்கும் டெங்கு பரவியுள்ளது. அதே போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் அறிகுறிகளுடன் 26 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று பரவலை தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது பாதுகாப்பு அளிக்கும்.

 

Tags :

Share via