ஓமன், மஸ்கட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 186 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் 60 பயணிகள் தங்கம் கடத்தி வந்தனர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு
ஓமன், மஸ்கட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 186 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கம், ஐபோன்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :