மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மனு

by Editor / 19-09-2023 09:22:58pm
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மனு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரவீந்திரநாத் குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ரவீந்திரநாத் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால், இதற்கு அவரது மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
 

 

Tags : மனைவியிடம் இருந்து விவாகரத்து

Share via