மின் வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள பர்கூர், பெஜ்லட்டியைச் சேர்ந்தவர் சிக்கன்னன். இவரது மனைவி அம்மானி (57). இவர், நேற்று முன்தினம், தனது தோட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதை பார்க்க இரவு சென்றுள்ளார்.இவரது தோட்டத்திற்கு அருகில் விவசாயம் செய்து வரும் பொம்மையன், வனவிலங்குகள் வராமல் இருக்க அமைத்திருந்த மின்வேலியில் சிக்கிய அம்மானி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.இந்நிலையில், அம்மாசியைக் காணாமல் உறவினர்கள் தேடிப் பார்க்கையில் மின்சாரம் தாக்கி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்து, இன்று அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :