உதயநிதி தலையை வெட்ட ரூ.25 கோடி அறிவிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உதயநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் தப்ப முடியாது என அயோத்தி துறவி பரமஹன்ஸ் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். "உதயநிதி தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால், நாங்களும் எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம். இல்லையெனில் அதள பாதாளத்தில் ஒளிந்திருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது. அவர் தலையை வெட்ட நான் அறிவித்த ரூ.10 கோடியை தற்போது ரூ.25 கோடியாக உயர்த்தி அறிவிக்கிறேன்" என மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார் அயோத்தி துறவி பரமஹன்ஸ்.
Tags :