சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர்
நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலியார் நகரில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் திருவுருவச்சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சிலையையும், அறிவகத்தையும் திறந்து வைத்தார். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், எம்.பி., கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Tags :