குண்டுவெடிப்பில் 18 பேர் பலி
சோமாலியாவின் பெலட்வீன் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை பிற்பகல் சோதனைச் சாவடிக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற வாகனம் விரைந்தபோது விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனினும், குண்டுவெடிப்பு குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்று அறிக்கை வெளியிடவில்லை.
Tags :