9 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர்

by Staff / 24-09-2023 02:15:45pm
9 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர்

சென்னை-நெல்லை, சென்னை-விஜயவாடா என நாடு முழுவதும் 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளன. 11 மாநிலங்களிலும் புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் இடையே ரயில் சேவை இணைக்கப்பட்டுள்ளன. சென்னை-நெல்லை ரயிலானது தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via