இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
நாகைமாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன் பிடிக்க ஹரி கிருஷ்ணன், சூர்யா, கண்ணன், சிரஞ்சீவி, சக்தி பாலன் உள்ளிட்ட 5 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 2 அதிவேக படகில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி, 550 கிலோ வலை, 50, ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள் வாக்கி டாக்கி,ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளீட்டுகளை கொள்ளையடித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடல் கொள்ளையர்களால் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்