தி. மு. க. கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

by Staff / 28-09-2023 03:44:34pm
தி. மு. க. கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

மேட்டூர் நகராட்சி கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. கூட்டம் நகராட்சி ஆணையாளர் நித்தியா, நகராட்சி பொறியாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் பேசும் போது, 'மேட்டூர் நகராட்சிக்கு புதிதாக வந்துள்ள அதிகாரிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு சிறப்பான நகராட்சியாக கொண்டு வர வேண்டும்' என்றார்.
தி. மு. க. கவுன்சிலர் ரங்கசாமி பேசும் போது, '30 வார்டுகளிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதனை அதிகாரிகள் நேரில் சென்று கண்டறிந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார். இதைத்தொடர்ந்து பேசிய நகராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், ஈஸ்வரி, திலகா, கலையரசி, கலா, பாப்பாத்தி, விஜயா உள்பட பலரும் தங்கள் வார்டுகளில் தெரு விளக்கு எரிவதில்லை, சாலை வசதி சரியாக இல்லை, குடிநீர் வினியோகம் சிறப்பாக இல்லை, பாதாள சாக்கடை சீர்குலைந்துள்ளது என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.இதனிடையே நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய தி. மு. க. கவுன்சிலர் இளங்கோ, வெளியே பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை நகர்மன்ற கூட நுழைவு வாயிலுக்கு எடுத்து வந்தார். பின்னர் பெட்ரோலை தலை மற்றும் உடல் மீது ஊற்றிக் கொண்டு நகராட்சி தலைவருக்கு எதிராக கோஷமிட்டப்படி தீக்குளிக்க முயன்றார்.

 

Tags :

Share via