பெண் மருத்துவருக்கு கத்தி குத்து
டெல்லியில் கடந்த சனிக்கிழமை மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாகூர் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் மருத்துவரை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மருத்துவர் ரத்த வெள்ளத்தில் விழுந்ததும், அவன் ஓடிவிட்டான். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். தனிப்பட்ட தகராறுகளே இதற்குக் காரணம் என்று தெரிகிறது.
Tags :