தண்டவாளத்தில் படுத்து பெண் தற்கொலை
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹபூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் குதித்தார். அதன்பின், ரயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்தை நோக்கி ஓடினார். அங்கிருந்தவர்கள் அப்பெண்ணைக் கண்டு கூச்சல் எழுப்பிய போதும், அவர் கண்ணிமைக்கும் நொடியில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பெண்ணின் விவரங்களை அறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :