சினிமாவிற்காக ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி
நடிப்பின் மீது உள்ள ஆசையால் ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் என்பவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அபிஷேக் சிங் 2011ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த இவர், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'டெல்லி கிரைம்' உள்ளிட்ட வெப்சீரியஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில் அவர் பணிக்கு ஒழுங்காக வராதது மற்றும் தேர்தல் ஆணையத்தை புறக்கணித்ததற்காக கடந்த பிப்ரவரி மாதம் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
Tags :