நாட்டில் புகுந்த 70 பயங்கரவாதிகள்
70 பயங்கரவாதிகள் போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிகிறது. அவர்கள் நேபாளத்தில் இருந்து நாட்டிற்குள் நுழைந்ததாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ரகசிய சேவையான ஐஎஸ்ஐ அல்லது வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இதனையடுத்து, நாட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகளை உளவுத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :