பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவு.

by Editor / 25-10-2023 11:27:10pm
பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவு.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரௌடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆளுநர் மாளிகை பதிவிட்டுள்ள X தள பதிவில், ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர். என ஆளுநர் மாளிகை பதிவிட்டுள்ளது.
 

 

Tags : பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவு.

Share via