ராஜ்பவனில் போட்டி அரசு நடத்தும் ஆளுநர் - வைகோ காட்டம்
திராவிடம் குறித்து தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பேசியுள்ள வைகோ, தமிழக சட்டப்பேரவையில் காமராஜர் பெயரை கூற மறுத்த ஆளுநர் ரவிக்கு, சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பேசத் தகுதியில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் போல ஆளுநர் செயல்படுவதும், இந்துத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், ராஜ்பவனில் போட்டி அரசு நடத்துவதைப் போல இயங்கி வருகிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படும் ஆளுநரால், தமிழக அரசின் வளர்ச்சி தடைபடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags :