முதியவர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 30-10-2023 12:12:32pm
முதியவர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டி. கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 63). இவர் டீக்கடை நடத்தி வந்தார். ராமன் உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்துள் ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராமன் தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே ராமன் இறந்த தாக தெரிவித்தார். இது குறித்து டி. கல்லுப் பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via