அதிர்ச்சி.. 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்

by Staff / 09-11-2023 01:12:52pm
அதிர்ச்சி.. 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்

இந்திய குடிமகன் அடையாள அட்டையாக ஆதார் இருந்து வருகிறது. இதனுடன் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை நீண்ட காலமாக அறிவுறுத்தி வந்தது. அதற்கான அவகாசம் முடிந்துள்ள நிலையில், 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 70.24 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ள நிலையில், இதில் 57.25 கோடி பேர் மட்டுமே ஆதாருடன் பானை இணைத்துள்ளனர். மீதமுள்ள 12 கோடி பேர் இணைக்கவில்லை என்றும், அதில் 11.5 கோடி பேரின் பான் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via