அந்தரங்க உறுப்பை காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

by Staff / 18-11-2023 04:23:30pm
அந்தரங்க உறுப்பை காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸாக பணியாற்றும் கருணாகரன் என்பவர் அப்பெண்ணின் முன்பாக தனது அந்தரங்க உறுப்பை திடீரென காண்பித்துள்ளார். இதனை அந்த பெண் வீடியோ எடுத்து பல்லாவரம் ரயில்வே நிலையத்தில் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கருணாகரனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via