4 மாணவர்கள் பலி - பாடகி நிகிதா இரங்கல்

by Staff / 26-11-2023 04:56:15pm
4 மாணவர்கள் பலி - பாடகி நிகிதா இரங்கல்

கொச்சி அறிவியல் & தொழில்நுட்பப் பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் நேற்று பலியாகினர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் மனதளவில் உடைந்துவிட்டதாக பாடகி நிகிதா காந்தி தெரிவித்துள்ளார். இந்த துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனக்கூறிய அவர், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னதாக நெரிசல் ஏற்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via