ரசாயன ஆலை தீ விபத்தில் 7 பேர் பலி

by Staff / 01-12-2023 11:31:10am
ரசாயன ஆலை தீ விபத்தில் 7 பேர் பலி

குஜராத்தின் சூரத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு, ஏதர் இண்டஸ்ட்ரீஸ் பெயரில் இயங்கி வந்த ரசாயன ஆலையில் எரிபொருள் கசிவால், வியாழக்கிழமை அதிகாலை 1:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காணாமல் போன 7 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மேலும் காயமடைந்த 24 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via