செக்ஸ் தொந்தரவால் மதபோதகர் கொலை பெண் கைது.

by Editor / 09-12-2023 10:14:51pm
 செக்ஸ் தொந்தரவால் மதபோதகர் கொலை பெண் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில்  உள்ள மண்டையூரில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (61)  வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.  

 சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கும் செல்வி என்ற பிரின்சி (46) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், டேனியலுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்கே சென்று தங்கிய செல்வி அங்கேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் சம்பத்தன்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்,  விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். 

இதைக் கேட்டு அதிர்ந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக இது குறித்து மண்டையூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கீரனூர் டி.எஸ்.பி செங்கோட்டு வேலன், மாத்தூர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட போலீஸார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றனர். 

அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் செல்வி, "மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார். அதனால், எனக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார். 

அப்போது அவரது வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் செயின் ஸ்பிராக்கெட் மூலம் அவரின் முகத்திலும் தலையிலும் வெட்டினேன். அதனால், ரத்த இழப்பு ஏற்பட்டு, அவர் இறந்துவிட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். பின்னர், கொலைசெய்யப்பட்ட மத போதகர் டேனியல் உடலை போலீஸார் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த மண்டையூர் காவல் நிலைய போலீஸார், செல்வியைக் கைதுசெய்தனர்.

 

Tags : மத போதகரின் செக்ஸ் தொந்தரவால் அவரை பெண் ஒருவர் கொலை செய்தார். 

Share via