படகும் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 540 கிலோ கஞ்சா கடத்தல்-சொகுசு கார் பறிமுதல் 2 பேர் கைது

by Admin / 11-12-2023 11:13:47pm
 படகும் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 540 கிலோ கஞ்சா கடத்தல்-சொகுசு கார்  பறிமுதல் 2 பேர் கைது

 

 விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை பெரியசாமிபுரம் பகுதியில் சூரங்குடி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது மதுரையில் இருந்து வந்த கொண்டு இன்னோவா காரை மறித்து சோதனை யிட முற்பட்டனர்.போலிஸ்சாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றது.அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வி தலைமையிலான போலிஸ்சார் இன்னோவா காரை துரத்தி சென்று சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து காரை  சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது..

இதனையடுத்து சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த தர்மேந்திரன், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சிவராஜ் உள்ளிட்ட இருவரையும் கைது சூரங்குடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் படகு மூலமாக இலங்கைக்கு கஞ்சா கொண்டு செல்ல இருப்பதும், சாக்கு மட்டைகளில் கொண்டுவரப்பட்ட கஞ்சா 540 கிலோ இருப்பதும் தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

இக்கடத்தல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 படகும் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 540 கிலோ கஞ்சா கடத்தல்-சொகுசு கார்  பறிமுதல் 2 பேர் கைது
 

Tags :

Share via