45 மீனவர்கள் 138 படகுகளை விடுவியுங்கள் : முதல்வர்

by Staff / 14-12-2023 01:31:09pm
45 மீனவர்கள் 138 படகுகளை விடுவியுங்கள் : முதல்வர்

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என. மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை கடற்படை வசம் உள்ள 138 விசைப் படகுகளையும் மீட்டு வர வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், இலங்கை அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via