பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை

by Staff / 22-12-2023 01:39:59pm
பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார். முன்னதாக, இதே வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது பொன்முடி விடுதலை செய்யப்பட்டதோடு, அவரின் சொத்துக்களும் முடக்கப்படாமல் விடுவிக்கப்பட்டது.

 

Tags :

Share via