திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டங்கள்- பிப்ரவரி 1-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம்
திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஜனவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 1-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வீடு, வணிக வளாகம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அனைத்திற்கும் இந்த மின்கட்டண கால அவகாசம் பொருந்தும் என்று நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Tags :