காரை ஓட்டி சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு
பெங்களூரு விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த அகர்வால் என்பவர் உயிரிழந்தார். பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, அகர்வாலுக்கு கொட்டகோட்டாவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவர் உயிரிழந்தார். ஆனால் இறந்தவரின் விரலில் இருந்த வைர மோதிரம் காணவில்லை என அவருடன் வந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :