முதியோர் ஓய்வூதியத்தை ரூ. 3, 000 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை

by Staff / 03-01-2024 04:46:16pm
முதியோர் ஓய்வூதியத்தை ரூ. 3, 000 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை

முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக்க வேண்டும்; பயனாளிகளை 1. 05 கோடியாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தில் முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 3, 000 ஆக உயர்த்தபட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 66. 34 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்திருக்கிறார். ஆந்திர மாநில மக்களுக்கு சமூக நீதியும், சமூகப் பாதுகாப்பும் வழங்குவதில் இந்தத் திட்டம் மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

 

Tags :

Share via