பூட்டிய வீட்டிற்குள் திருடச் சென்ற நபர் தூக்குப்போட்டு தற்கொலை. .

by Editor / 05-01-2024 09:53:04am
பூட்டிய வீட்டிற்குள் திருடச் சென்ற நபர் தூக்குப்போட்டு தற்கொலை. .

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமியம்மாள், வீட்டு வேலை செய்கிறார். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டுவேலைக்காக லட்சுமியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அவரது மகன் வெளியே விளையாடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன் உள்ளே 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இருந்தது தெரியவந்தது. உடனடியாக கதவை வெளிப்புறமாக தாழிட்ட லட்சுமியம்மாளின் மகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டுக்குள் இருந்த நபர் அச்சத்தில் உள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவலின்பேரில் விரைந்து வந்த போலீஸார் கதவை திறந்து பார்த்தபோது அந்த நபர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அந்த நபரின் கைரேகை கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் ஆம்பூர் அருகே உள்ள கடம்பூரைச் சேர்ந்த பூபதி என்பது தெரிய வந்தது. போலீஸார் உடனடியாக  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து  வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : பூட்டிய வீட்டிற்குள் திருடச் சென்ற நபர் தூக்குப்போட்டு தற்கொலை. .

Share via