அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு

by Staff / 05-01-2024 12:50:03pm
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் அயோவா பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் 17 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகி உள்பட 4 மாணவர்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் சமீபத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 656 துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

 

Tags :

Share via