போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை

by Staff / 01-02-2024 11:40:49am
போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு மற்றொரு போக்சோ வழக்கில் தொடர்புடையதற்காக 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வீரணகாவு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கு எதிராக கட்டக்கடை போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் குமார் தீர்ப்பை வழங்கினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 7 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2016ஆம் ஆண்டு நடந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு, இதேபோன்ற வழக்கில் அப்பெண்ணுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.59,000 அபராதமும் விதித்து அதே நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

Tags :

Share via