இளைஞருக்கு எமனாக மாறிய புது பைக்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆயக்காட்டூர் பள்ளம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 21. விசைத்தறி தொழில் அச்சுப்பிணைக்கும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தினேஷ் குமாருக்கு பெற்றோர் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள அதிவேகமாக செல்லும் புதிய மோட்டர் சைக்கிளை மொத்த தொகை கொடுத்து வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அவர் தனது தாயாரிடம் தனது புதிய மோட்டார் சைக்கிளை நண்பர்களிடம் காட்டி விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு, நேற்று இரவு 10 மணியளவில் தாஜ்நகர் என்ற பகுதி அருகே வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் தினேஷ் குமார் அதிவேகமாக இரு சக்கர வானத்தை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிய அன்றைய தினமே கீழே விழுந்து பரிதாபமாக இளைஞர் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :