மீண்டும் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்: சி.வி.சண்முகம்

by Staff / 10-02-2024 03:21:10pm
மீண்டும் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்: சி.வி.சண்முகம்

மீண்டும் ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக இருக்க மாட்டார் என தமிழக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை அருகே அதிமுக நடத்திய போரட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார் மேயராகத்தான் இருப்பார். அந்த வகையில் கூட்டாட்சித்தத்துவத்தை சிதைத்து வருகின்றது மத்திய பாஜக அரசு. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் சென்று முதல்வர் ரங்கசாமி என்ன கேட்டார்? புதுச்சேரி மக்களை ஏமாற்றுகின்றார். புதுச்சேரியில் கூட்டணியில் உள்ள அரசுக்கு மூன்றாண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என்று பட்டியலிட முடியுமா? என கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via