பப்புவா நியூ கினியாவில் வன்முறை - 53 பேர் பலி
பப்புவா நியூ கினியா நாட்டில் பழங்குடியினருக்கு இடையே நேற்று நடந்த வன்முறை பயங்கர சோகத்தை ஏற்படுத்தியது. குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். எங்கா மாகாணத்தில் இந்த வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் பலர் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாக போலிஸார் கருதுகின்றனர். சாலைகளிலும், ஆற்றங்கரையிலும் கிடந்த உடல்களை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :