ஜெயலலிதா நகைகளை அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை

by Staff / 05-03-2024 02:11:16pm
ஜெயலலிதா நகைகளை அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், கைக்கடிகாரம் உள்ளிட்ட நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.. கர்நாடக நீதிமன்ற கருவூலத்தில் உள்ள நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரி ஜெயலிலதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via