செய்தியாளர் வெட்டப்பட்ட சம்பவம்.. அதிர்ச்சி பின்னணி

by Staff / 09-03-2024 03:31:22pm
செய்தியாளர் வெட்டப்பட்ட சம்பவம்.. அதிர்ச்சி பின்னணி

ஜனவரி 24-ம் தேதி இரவு பல்லடம்- பொள்ளாச்சி சாலையில் கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிவந்த நேசபிரபு என்ற நபர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதனையடுத்து 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முன் பகை காரணமாக கூலிப்படையை ஏவி இந்த கொடூர செயலை செய்ய வைத்த காவலர் சுபின் பிரபு நேற்று முன்தினம் சரணடைந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணையில் தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் செய்தி வெளியிட்டதால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக சுபின் பிரபு கூறியுள்ளார்.

 

Tags :

Share via