14 பேர் குண்டர் சட்டத்தில் கைது: காவல்துறை நடவடிக்கை

by Staff / 12-03-2024 01:13:19pm
14 பேர் குண்டர் சட்டத்தில் கைது: காவல்துறை நடவடிக்கை

சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி, ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்குகஞ்சா கடத்திய  நசீனா சாய் (26),  பாலியல் தொழில் நடத்திய சேலம் அம்மாபேட்டை இளவரசன் (30), மெரினா கடற்கரையில் கஞ்சா விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணி கார்த்திக் (25), மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த அய்யனார் (24), வழிப்பறியில் ஈடுபட்ட மேற்கு அண்ணாநகரை சேர்ந்த விஜய் (27), கிண்டி  வழிப்பறியில் ஈடுபட்ட சீனிவாசன் (26), கஞ்சா விற்பனை செய்த கேளராவைச்  சேர்ந்த ஆகாஷ் (29),கஞ்சா விற்பனை செய்த அயனாவர யோகராஜ் (33), மாதவரம் வழிப்பறி கார்த்திக் (23), திருவொற்றியூரை சேர்ந்த நசிர் பாஷா (22), புளியந்தோப்பை சேர்ந்த அஜித்குமார் (22), திருவொற்றியூர் பகுதியில் ரஞ்சித்  கொலை வழக்கில்  யுவராஜ் (23), திருவொற்றியூரைகோகுல், ஆயிரம் விளக்கு அஜித்குமார் ஆகிய 14 பேரை காவல்துறை  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via