குண்டர் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

by Staff / 20-03-2024 02:46:44pm
குண்டர் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

நாகை மாவட்டம் வெளிபாளையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனை ஈடுபட்ட மகாலிங்கம் மனைவி தேன்மொழி வயது 47 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் தேன்மொழியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷிசிங் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்ஸ்சுக்குபரிந்துரை செய்தார்.இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்ஸ் தேன்மொழியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று மாலை தேன்மொழி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

Tags :

Share via