இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - வீடுகள் சேதம்

by Staff / 22-03-2024 04:30:01pm
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - வீடுகள் சேதம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவானது. கடலுக்கடியில் அந்த நாட்டின் நேரப்படி காலை 11.22 மணிக்கு துபான் ரீஜென்சிக்கு வடகிழக்கே 132 கி.மீ தொலைவில் மையம் கொண்டு 10 கி.மி ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. ரிக்டர் 4 க்கு மேல் ஏற்படும் நிலநடுக்கங்கள் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via