முருகன் உள்ளிட்ட மூன்று பேர் இலங்கை சென்றனர்

by Staff / 03-04-2024 12:48:14pm
முருகன் உள்ளிட்ட மூன்று பேர்  இலங்கை சென்றனர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை - கொழும்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை சென்றனர். மூவரும் இலங்கை செல்ல மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மூவரும் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் சாந்தன் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
 

 

Tags :

Share via