குழந்தையின் தலையை கவ்வி சென்ற நாய்
மதுரை பீபீ குளம் வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அங்கே பணம் எடுப்பதற்கு செல்லூரை சேர்ந்த அய்யனார் என்பவர் சென்றுள்ளார். அப்போது அங்கே நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார், குழந்தையின் தலையை மீட்டுள்ளனர். அத்துடன் மீட்கப்பட்ட குழந்தை தலை உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பதப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் தலையின் நாய் கவ்வி சென்ற விவகாரம் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் உடலை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்து ஒரு வாரமான குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது . அத்துடன் துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் குப்பைத் தொட்டிகள் கால்வாய்களில் குழந்தையின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையை நரபலி கொலை செய்யப் பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :