திருவில்லிபுத்தூர் பால்கோவா படம் அச்சிட்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

by Editor / 15-10-2021 03:39:48pm
திருவில்லிபுத்தூர் பால்கோவா படம் அச்சிட்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு


புவிசார் குறியீடு பெற்ற திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை புதன்கிழமை வெளியிட்டப்பட்டது.


மதுரை மல்லிகைப் பூ, சங்கரன்கோவில் பிரியாணி, மணப்பாறை முறுக்கு, சேலம் வெல்லம், திருநெல்வேலி அல்வா போன்றவை பிரபலமானது. இந்த வகையில் திருவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவா தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா பிரபலம். இத்தகைய பெருமை உடைய பால் கோவாவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. இந்நிலையில் தற்போது திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.

இதையொட்டி திருவில்லிபுத்தூர் தபால் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் பால்கோவா படம் அச்சிடப்பட்ட அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இதனை விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட விருதுநகர் மாவட்ட ஆவின் தலைவர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.

 

Tags :

Share via