துரை வையாபுரிக்கு ம.தி.மு.கவில் முக்கியப் பொறுப்பு

by Editor / 20-10-2021 08:00:43pm
துரை வையாபுரிக்கு ம.தி.மு.கவில் முக்கியப் பொறுப்பு

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனானா துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். அதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via