மழை காரணமாக கார் மீது மரம் சாய்ந்தது

by Editor / 25-11-2021 02:26:07pm
மழை காரணமாக கார் மீது மரம் சாய்ந்தது

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மணிநேரமாக பரவலான மழை பெய்து வருகிறது,இதன் தொடர்ச்சியாக சுரண்டை காமராஜர் சிலை அருகே சுமார் 1பல  ஆண்டு பழமையான மரம் இருந்துவந்த நிலையில் கன மழையின் காரணமாக அந்த மரம் வேறோடு சாய்ந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான அந்த பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும் அந்த பகுதியில்  டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது. மரம் சாய்ந்ததால் அந்தப்பகுதியில் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியினர்  தீயணைப்பு துறையினர், காவல்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர்கள் ரவீந்திரன், பாலகிருஷ்ணன், மற்றும் வீரர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து காவல்துறை உதவியுடன் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் மரத்தை அகற்றினர். தொடர்ந்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வெட்டப்பட்ட மரத்தை அப்புறப்படுத்தினர். 
 

 

Tags :

Share via